கரன்சி நோட்டில் காந்தியார் சிரிப்பதேன்?

நான்
மோகன்தாஸ் கரம்சன்
நேரு பேசுகிறேன்....

என்னை,
காந்தி என்று சொல்லிக்
கேவலப் படுத்தவேண்டாம்.

இந்த மண்ணில்
யார் யரையோ
அன்னை என்று சொல்லிவிட்டு
என்னைத் தந்தை என்று
அவமானப் படுத்தாதீர்கள்.

எச்சிலைத் தொட்டுத் தொட்டு
என் முகத்தில் ஒட்டி ஒட்டி
பணத்தை எண்ணுவீங்க...
என்னை,எண்ண மாட்டீங்க...

கட்டுக் கட்டா நோட்டு வச்சு,
பெட்டிக்குள்ள போட்டு வச்சு,
கட்சிக்குள்ள கூட்டு வச்சு,
ஓட்ட எண்ணுவீங்க.... பிறகு...
நோட்ட எண்ணுவீங்க...

எண்ண வேண்டியத எண்ண மாட்டீங்க...
பண்ண வேண்டியதப் பண்ண மாட்டீங்க...

எனவே....

கோட்சே....!
மீண்டும் நீ பிறந்து வா...

கைத் துப்பாக்கி இல்லையே என்று
கவலைப் படாதே....

இந்தியாவின் ஆயுதக் கிடங்கு
இலங்கையில் இருக்கிறது....
'புத்தம் சரணம்' என்று சொல்....
புரிந்து கொள்வார்கள்;

ஏ.கே.47 எடுத்துக்கொள்....
இன்னொரு சத்திய சோதனை எழுது...

என்ன பார்க்கிறாய்?
அகிம்சையைத் துறக்க வேண்டிய
அவசியம் வந்து விட்டது;

      இந்தியா இரை போட்டது 
      ராஜ பச்சி எச்சமிட்டது 
      அசோகச் சக்கரத்தில். 


அந்தப் பச்சியைச் சுடு...
குறி பார்த்துச் சுடு.

கச்சத் தீவில் கால் வை...
இந்திய தேசியக் கொடியைப் பறக்க விடு...

தமிழகத்தின் தறுதலைகளைத்
தவறாமல் சுடு.

நீ சுட வேண்டிய காந்திகள்
நிறைய இருக்கிறார்கள்....
கவனமாய்ச் சுடு....
புனிதம் பெறு....
மகாத்மாவாய் இரு....

ஹா ... ஹா....ஹா...
காந்தி, ஏன் சிரிக்கிறேன் தெரிகிறதா?
ரணம் புரிகிறதா? 

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புரிகிறது ! நன்றி !

Post a Comment