என்னைப் பெருவதற்காய்
அவர்கள் கூடவில்லை;
அவர்கள் கூடியதால்
நான் பிறந்தேன்.
அத்தனை திமிரும்
அடங்கி விட்டது;
காசு பணம்
கரைந்து விட்டது;
இரத்தம் சுண்டிச்
சுருங்கி விட்டது;
ஏதேதோ நோய்....
ஏதேதோ மருந்து....
எல்லாமுமாய்ச் சேர்ந்து
எண்ணிக் கொண்டிருக்கிரார்
நாட்களை;
செத்தால்....
செய்தி
சொல்ல வேண்டாம்.
என்
பிறப்புக்கு மட்டுமே
விதை போட்ட
ஒருவனை....
எப்படிச் சொல்வேன்
அப்பனென்று?
அவர்கள் கூடவில்லை;
அவர்கள் கூடியதால்
நான் பிறந்தேன்.
அத்தனை திமிரும்
அடங்கி விட்டது;
காசு பணம்
கரைந்து விட்டது;
இரத்தம் சுண்டிச்
சுருங்கி விட்டது;
ஏதேதோ நோய்....
ஏதேதோ மருந்து....
எல்லாமுமாய்ச் சேர்ந்து
எண்ணிக் கொண்டிருக்கிரார்
நாட்களை;
செத்தால்....
செய்தி
சொல்ல வேண்டாம்.
என்
பிறப்புக்கு மட்டுமே
விதை போட்ட
ஒருவனை....
எப்படிச் சொல்வேன்
அப்பனென்று?
3 comments:
ஆழமிக்க வரிகள்.. அருமை..
நன்றி நண்பரே...
வருகை தொடரட்டும்...
' என்னைப் பெருவதற்காய்
அவர்கள் கூடவில்லை;
அவர்கள் கூடியதால்
நான் பிறந்தேன்.'
ஏற்றுக்கொள்ள இயலாத உண்மை. மிக அருமை.
Post a Comment