ஆனந்த மழையில் நனைகிறாய்
..... அன்பின் உறவை அழைக்கிறாய்
வெற்றியின் தேவதை இணையவே
..... வேள்வியின் பயனாய் வெல்கவே.

-- கவிதாமணி
வாழிய...
...சிறந்து...
......செழித்து...
.........நெடிது...
............நிலைத்து...
...............இனிது...
..................இணைந்து...
.....................அன்புடன்...
....................-- கவிதாமணி.
அறிவேன் அறிவேன் பிழைகள் அறிவேன்
அறிவேன் அதைநீர் அரிவீர் எனவும்
அறிவீர் அறிவீர் ஐயா அடியேன்
அறியாத ஆயிரம் உண்டு.
இல்லை என்று இயல்புரைத் துள்ளேன்
தொல்லை இதனைத் தொடர்வது வீணே
எல்லை நமக்கு இருப்பத னாலே
இல்லை இதற்குப் பதில்.
மரபின் இலக்கணம் மாசறக் கற்று
உரனும் உணர்வும் உயிர்ப்புடன் ஊட்டின்
அரனும் அரியும் அதனதன் போக்கில்
கரனும் அறியும் கவி.

வெண்பா அகவல் விருத்தமொடு வஞ்சி
வண்பா கட்டளை வாய்த்த கலியென
நண்பா நயப்பா இயற்றினர் பண்டு;
புண்பா புனைவது போக்கு.

தளைகள் அசைகளும் தட்டாமல் யாப்பின்
கிளைகள் இலைகளும் வெட்டாமல் கீர்த்தி
முளைகள் முனைகளும் முட்டாமல் சீர்த்தி
வளைகள் வசப்பட வாழ்த்து.

வார்த்தைக்கு வார்த்தை வலிந்து வலிந்துமே
கோர்த்தது கோர்த்துக் குற்றம் குவிந்திட
சேர்த்தது சேர்த்துச் செய்த செய்யுளை
பார்த்தது பார்த்துப் பதை.

இங்கே இருக்கும் இவைகள் எவையுமே
மங்காத் தமிழின் மரபுக் கவிகளா?
எங்கே எதற்கு எதுவும் தெரியாது
பொங்கு கவிஞனே பொங்கு.
விடிவிற்காய் வெய்யை இழுத்துவர வேண்டும்;
முடியாத செய்கை முனைந்துசெய்ய வேண்டும்;
வடியும் வியர்வை மடைதிறக்க வேண்டும்;
விடியலை நோக்கி விரைந்து.   (இன்னிசைவெண்பா)

-- கவிதாமணி
பொங்க வேண்டியதற்கு,
பொங்க வேண்டிய நேரத்தில்,
பொங்க வேண்டிய விதத்தில்,
பொங்குவோம்...

-- கவிதாமணி.
தவறானவர்கள்
தவறானவர்களுக்கு
தவறாமற்செய்த தவறு
தவறாமல் தவறாது.

-- கவிதாமணி