அடேய்... வேகமா வாடா... ஓடி வாடா... கம்ப எடுடா... கல்லத் தூக்குடா... வேகமா வாங்கடா... போயிரப் போகுதுடா...
ஆத்தீ... எம்மாந்தடி... கருநாகம்டா... போட்டா அம்புட்டுத்தான்...
எங்கடா...? எங்கடா...? ஏய் தள்ளி நில்லுங்கடா...
பாத்து... பாத்து...
அந்தா நெளியுதுடா... அடிடா... அடிடா...
ஏய் சீறுதுடா... கவனமா அப்படியே குத்திப் பிடிடா...
வசமா மாட்டிக்குச்சுடா... எலேய் அப்படியே பிடிச்சுக்கிறேன்... நீ தலையில கல்லப் போடு...
நாலைந்து பேர் சேர்ந்து நையப் புடைத்தனர்...
ஏய்... போதும்டா... உசுரு போயிருக்கும்டா...
பொழச்சா, "நீயா" படத்துல மாதிரிப் போட்டுத் தள்ளிரும்டீ...
செடிய வெலக்குங்கடா... நல்லாப் பாப்பம்;
கருநாகம் இல்லடா... வெறும் நாகம் மாதிரிதான் தெரியுது...
மெதுவாய் மெதுவாய் வெளியே தள்ளிக் கொண்டுவந்து உற்றுப் பார்த்தால், கண்களை எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன...
அட... செத்த பாம்பு.
1 comments:
நல்ல காமெடி...
Post a Comment