1. எத்தனை எத்தனை
சித்திரை வந்தன்
இத்திரை மீதினிலே – அவை
எத்தனை எத்தனை
முத்திரை பதித்தன
மாந்தரின் நெஞ்சினிலே.
2. பித்தரைப் போலிவர்
பிதற்றித் திரிந்தது
எத்தனை காலமடா – அவர்
பித்தம் தெளிந்ததும்
சித்தம் சிறந்ததும்
சத்திய வேதமடா.
3. புத்தரை காந்தியைப்
போற்றிப் புகழ்ந்த நம்
புனிதம் போனதெங்கே – அவர்
போதனை யாவையும்
புதைகுழி போனதும்
புழுக்கள் ஆனதங்கே.
4. தோல்வியும் துயரும்
தொடரா திருப்பது
தோல்வலி உள்ளவரை – அவர்
புலன்கள் அடங்கிப்
புந்தி தெளிந்தால்
புதியன புரியமடா.
5. ஆன்மா அதற்குள்
அறிவுச் சுடரொளி
ஆயிரம் எழுந்ததடா – அதன்
வெளிச்ச விழுதுகள்
விரிந்து பரந்தொரு
வித்தகம் ஆனதடா.
6. தெளியா ஞானச்
செறுக்கில் மானுடம்;
சிதிலம் ஆனதடா – அவர்
தெளிந்து தெளிந்து
தேரிய போது
தெய்வதம் ஆனதடா
7. தொண்டே தொழிலாய்க்
தொண்டவர் நெஞ்சம்
கோவிலுக்கு இணையாகும் - அவர்
உடல்பொருள் ஆவி
உணர்வுகள் யாவும்
உன்னத மானதடா.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
நன்றி யோவ் அவர்களே...
வேளைப்பலு காரணமாக இங்கு பதிவுப் போடவும் தங்களுக்கு உடனே பதில் எழுதவும் முடியவில்லை மன்னித்துவிடுங்கள்.
Post a Comment