விவஸ்த்தை

     என்ன  செய்கிறோம் என்ற விவஸ்த்தை இல்லாமலேயே என்னென்னவோ செய்கிறோம்..... 

     சாமி கும்பிடு..... சடங்கு சாஸ்திரம்..... அரசியல்..... தேர்தல்..... அக்கம் பக்கத்துப் பொறணி..... 

     செத்த வீடென்ற சிந்தனையே இல்லாமல் செல்போனில் கதைப்பது.....  கேலி பேசிச் சிரிப்பது.....

     இப்படித்தான், முல்லைபெரியாறு பிரச்சனையிலும் முண்டாதட்டி, மூர்க்கமாய் ஆர்ப்பாட்டம் செய்து, கூட்டத்தோடு கூட்டமாய்க் கோசம் போட்டு, மீடியாக்களிடம் வேஷம் போட்டு..... தடியடியில் சிக்காமல் தப்பித்து வந்தான்;

     காலையில் கொக்கரித்த கோழி இப்போது சிக்கன் 65 ஆக மணத்தது.....

     சாப்பிட்டுக் கொண்டே பக்கத்திலிருந்த புத்தகத்தைப் புரட்டினான்.....

     செம்பை முருகானந்தம் எழுதிய 'தவிப்பு' சிறுகதையைப் படிக்கப் படிக்க.....

   ''பதுங்கு குழிக்குள் பயந்து பயந்து,அண்ணன் தன் கண்களை மூடிக் கொண்டு, தங்கையின் வாயைப் பொத்தப் பொத்த,அடக்க முடியாத அலறலோடு பிள்ளைப் போராளி பிறந்த போது..... வெடித்துச் சிதறி வந்து விழுந்த ஒரு வளையல் கையில் ஒற்றை விரல் மட்டும் துடித்துக் கொண்டிருக்க....'' 

     துளாவிக் கொண்டிருந்த இவன் கைகளில்..... காலித் தட்டு.....

     மனைவியை முறைத்தான்.....

     சூடாக விழுந்தன 'சிக்கன் 65'


0 comments:

Post a Comment