அவன் ஒன்றும் பெரிய எழுத்தாளன் இல்லை; ஆனால் எழுதிக்கொண்டேதான் இருப்பான்....
அவன் கவிஞனும் இல்லை;ஆனால் தன் பெயருக்கு முன்னால் கவிஞன் என்று போடாததற்காகத் தன் கல்யாணத்தையே நிறுத்தியவன்.....
பேனாவில் எழுதப் பிடிக்காது; பென்சில்....பென்சில்தான் தன் சிந்தனை ஓட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் என்று நம்பி, பென்சிலும் பேப்பருமாய் அலைபவன்.....
100 வார்த்தைகளை வைத்துக் கொண்டு 400 பக்கங்கள் எழுதிவிடும் சாமர்த்தியத்தைத் தெரிந்தவர்களிடமெல்லாம் படித்துக் காட்டிப் பரவசப் படுவான்.....
ஓடி ஒழிந்தவர்களும், பின்னால் பேசியவர்களும் பாக்கியசாலிகள்.
பாவப்பட்ட ஒரே ஜென்மம்..... தன் இஷ்ட தெய்வத்திடம் மன்றாடிக் கேட்டது விவாஹரத்தல்ல.....
செவிடாய்ப் போகும் வரம்.
0 comments:
Post a Comment