கவர் ஸ்டோரி:

கன்னிமை கழித்த
காவல் துறையின்
கட்டுக் கதைகளை……

கவர்ச்சி அரசியலின்
கனவுக் கன்னிகளின்
காதல் பரிசுகளை……

மதன மாளிகைகளின்
மௌனப் புலம்பல்களை…...

அடக்கு முறைகளின்
அரிதாரப் பூச்சுகளை……

அடையாளம் காட்டியதற்காக

சந்தனக் கட்டைகள் போல்
நாங்கள் சாம்ளாகியிருக்கிறோம்.
அப்போதும்
எங்கள் மனம் - சந்தனம்தான்.

0 comments:

Post a Comment