கணக்கும் பிணக்கும் எதனால் என்ற
காரணம் நமக்குத் தெரியாமல்
கயமைத்தனங்கள் ஒழிவதில்லை!
பணத்தின் மேலே பணத்தைப் போட்டுப்
பாது காத்தும் பயனில்லை:
பாடையில் பேதம் ஏதுமில்லை!
பிணத்தின் மேலே பிணத்தைப் போட்டுப்
புதைத்ததுப் பார்த்தும் முடியவிலலை:
பூமியில் சவக்குழி மீதமில்லை!
குணத்தில் உயர்ந்த குவலய மாந்தர்
குழியில் இருந்தும் உயிர்த் தெழுவார்:
கோபுரம் போலே நிமிர்ந்திடுவார்!
தனக்குத் தனக்கெனும தன்னுணர்வு
தகர்ந்தால் தேசம் நன்மை பெறும்:
எனக்கும் உனக்கும் பகை மூட்டம்
எல்லாம் இந்தச் சுயநலமே!
மனமே எதற்கும ஆதாரம்
மாண்புகள் தங்கும கூடாரம்:
மனமே கனவுகள் நனவாக –
மானிடப் பண்பினை வளர்த்துவிடு!
கனக்கும் இதயச் சுமைகளுமே
கண்ணீர் விட்டால் கரைந்திடுமா?
உனக்கென உருகும் இதயங்கள்
உறுதுணையானால் இடர் வருமா?
அன்பால் உலகை வசப்படுத்து;
அதனால் உன்னை வளப்படுத்து;
உன்னால் உலகம் வளமானால்
உயிரின் பயனே அதுதானே!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment