1. அட போடா போடா கிறுக்கா - நீ
எங்க வந்த முறுக்கா
அட மூடா மூடா உனக்கு - இந்த
புத்தி இருப்பது எதுக்கு?
2. அன்பு என்று சொல்லக் கொண்டு
அலையுது உன் மனசு - அட
அன்பு என்று சொல்வ தெல்லாம்
அந்தக் காலப் பழசு.
3. முன்ன ஒன்னு பின்ன ஒன்னு
சொல்வது தான் புதுசு - அட
முதுகில தான் மொய்க்கும் இந்த
ஈக்கள் பல தினுசு.
4. அண்ணன் எனத் தங்கை என
வாழ்ந்த கதை எல்லாம் - அட
அடுப்பங் கரை சாம்பல் என
ஆறிப் போன பின்னே,
5. தொடச் செடுத்து அள்ளிக் கொண்டு
தூரக் கொட்டு பெண்ணே - அட
தூசி யாகப் பறந்து வரும்
தூர விலகு கண்ணே!
6. இடிச்ச புளிய எடுத்து வச்ச
ஓலக் கொட்டான் போல - அட
ஒடிஞ்சு விழுந்த மனசுக் கென்ன
ஒட்டுப் போடுற வேல.
7. ஒட்டுப் போட ஒட்டுப் போட
ஒடைஞ்சு போற கம்பு - அட
எட்டத் தூக்கி எறிஞ்சு விடு
எதுக்கு இந்த வம்பு.
8. பட்டுப் போன இலை நொறுங்கிப்
பாட்டுப் பாடும் பாரு - அட
விட்டுப் போன உறவை எண்ணி
விசும்பி நிற்பது யாரு?
9. மொட்டுப் போல மன சிருந்தா
வாசம் எப்படி வீசும்? – அட
மொட்டு மெல்ல மலர்ந்த போது
தென்றல் வந்து பேசும்.
10. வண்ண வண்ணக் கனவுகளை
வரைஞ்சு வச்ச கையே - அட
வக்கரித்துக் கொட்டி விடும்
வரைஞ்ச படத்தில் மையே.
11. திண்ணத் திண்ணத் திகட்டி விடும்
தீஞ்சுவைகள் எல்லாம் - அட
தின்ற பிறகு புத்தி வந்து
தெரிவது தான் எல்லாம்.
12. ஒன்னும் ஒன்னும் சேரும் போது
ஒன்னு ரெண்டா மாறும் - அட
ஒன்னம் ஒன்னும் பெருக்கும் போது
ஒன்னு தானே தேரும்.
13. ஒன்னப் போல உலகைப் போல
நானிருக்க மாட்டேன் - அட
ஒன்றை யேனும் செய்தி டாமல்
உசிரை விட மாட்டேன்.
14. வெம்பிப் போன பிஞ்சு லேயும்
விதை இருக்குது பாரு - அட
விதைகளுக்குள் ஒழிஞ்சு இறக்கிற
விதைகள் எத்தனை கூறு?
15. தும்பை விட்டு வாலைப் பிடிக்கும்
புத்திசாலிக் கூட்டம் - அட
தூக்கி எற்ஞ்ச பந்துகள் தான்
துள்ளிக் குதிக்கும்; ஆட்டம்.
16. தும்பி எல்லாம் பூவை விட்டுத்
தூர விரலகிப் பேனா - அட
துன்ப மெல்லாம் ஓடிவிடும்
தூக்கம் வரும் தானா.
17. நம்பி வந்த நடு வழியில
நாலு பாதை பிரிஞ்சா - அட
நம்ம வழிய நாம பாத்து
நடக்க வேணும் தெரிஞ்சா.
18. கட்டுப் போட கட்டுப் போட
ஆறிப் போகும் புண்ணு - அட
கட்டுச் சோத்துல எலிய வச்சுக்
கட்ட லாமா கண்ணு?
19. வெட்டி விட வெட்டி விட
ஒட்டி வளரும் களைதான் - அட
வெட்டிப் பயல் உனக் கெதுக்கு
வெடித்த பலாச் சுளைதான்.
20. தட்டி விடத் தட்டி விடத்
தாங்கிப் பிடிக்கும் வயசு - அட
குட்டி விடக் குட்டி விடக்
குனிஞ்சு கொடுக்கும் மனசு
21. எட்டி உதைச்ச கால் களிலே
என்ன வசியம் வச்சியோ - அட
எழுந்து வந்து கால டியில்
ஏனோ தவம் கிடக்கிறேன்.
22. உரசி உரசி பாத்த முன்னா
தங்கம் கரைஞ்சு போகும் - அட
உரசா மலே எடுத்த முன்னா
பித்தளை கலந்து போகும்.
23. உரசும் போது மனசுக் குள்ளே
எழுந்து நிக்கிற ஆச - அட
விரசம் ஒன்னு வந்து விட்டா
விழுந்து விடும் பூச.
24. ஒன்னு போல ஒன்னு இருந்தா
மாற்றம் எப்படித் தெரியும் - அட
மாற்றம் இல்லா வாழ்க்கை யிலே
மகிழ்ச்சி எப்படி விரியும்?
25. என்னப் போல உன்னப் போல
யாரும் இருக்க வேண்டாம் - அட
என்ன நமக்கு நடந்த தென்று
யாரும் அறிய வேண்டாம்.
26. நாயும் நரியும் நட்பு என்று
நம்பி வந்த மானே - அட
நாளை நீயும் நாய் நரியின்
நல்ல வேட்டை தானே.
27. நீயும் நானும் சிரித்த தெல்லாம்
போலி யான வேசம் - அட
போயும் போயும் நமக் கெதுக்குப்
புனித மான பாசம்?
28. தாயும் சேயும் சேர்ந்து போனா
தாரு மாறா ஏசும் - அட
வாயும் வயிறும் வேறு என்று
தத்து வங்கள் பேசும்.
29. போயும் போயும் இந்த உலகில்
நான் இருக்க லாமா? - அட
நீயும் கூட என்ன விட்டுப்
போயி ருக்கலாமா?
30. தேயும் அந்த நிலவினை நான்
தேடித் தேடித் திரிகிறேன் - அட
தேய்ந்து நிலவு வளரும் போது
தேய்ந்து நானும் மடிகிறேன்.
31. சாய்ந்த மரம் காய்ந்த தனால்
வேரின் மீது வெறுப்பு – அட
காய்ந்த மரம் சாய்ந்த தற்குக்
கிளை களன்றோ பொறுப்பு.
32. பாய்ந்த புலி பதுங்கு வதால்
பாய்வ தற்கா தயக்கம் - அட
படுத்து றங்கப் போவது போல்
பாசாங்கு மயக்கம்.
33. ஓய்ந்து மனம் உலன்று தினம்
ஒடுங்கி விடும் வேளை - அட
ஆய்ந்து அறிய முடியாமல்
அடங்கி விடும் நாளை.
34. ஏதுக்கடா இப்படி நான்
ஏளனமாய்ப் போனேன் - அட
தீது செய்த பாவியைப் போல்
திட்டி விரட்ட லானேன்.
35. ஓதி வைத்த இலக்க ணங்கள்
உதவ வில்லை எனக்கு - அட
பாதிப் பாடம் படித்த தனால்
பயனும் இல்லை உனக்கு.
36. போது மடா இது வரையில்
புலம்பி அழுத தெல்லாம் - அட
தூது போக யாரு மில்ல
தூய உறவு சொல்ல.
37. மோது தடா விழி இரண்டில்
மோக னமாய்த் தூக்கம் - அட
மேதி னியில் எனக் கிருக்குது
எத்த னையோ ஏக்கம்;
38. விட்டு மனம் வெறுத் தவளை
விலகி விட முடியுமா? - அட
விருப்பம் இல்லை என்று சொல்லி
உசிரை விட முடியுமா?
39. நீரடித்து நீர் விலக
நீள் நிலத்தில் முடியுமா? - அட
நீ அடித்து நான் அழுக
நீயும் சிரிக்க முடியுமா?
40. ஊர் சிரிக்கும் வாய் அடக்க
மூடி செய்ய முடியமா? - அட
தேர் இழுக்கும் வடம் திரிக்க
நார் உரிக்க முடியுமா? – கல்
நார் உரிக்க முடியுமா?
41. யார்எதனைச் சொன்ன போதும்
நாம் பிரிய லாகுமா? - அட
உயிர் இருக்கும் வரை நாமும்
உடன் பிறப்பு அல்லவா!
42. எங்கோ ஏதோ இடிக்கிறது - அட
ஏனோ என்மனம் துடிக்கிறது
பங்கோ பகையோ அடிக்கிறது - அட
பாசம் என்றே நடிக்கிறது.
43. மாற்றம் ஒன்று வரவேண்டு - அட
மாட்சிமை எல்லாம் தரவேண்டும்;
ஏற்றம் எனக்கு வரவேண்டும் - அட
ஏக்கம் தீர வரம்வேண்டும்.
44. காலம் இனியும் கடத்தாதே - அட
காரியம் தவறாய் நடத்தாதே;
ஞாலம் முழுதும் இடம் வேண்டும் - அட
நாளும் எனக்கு நலம் வேண்டும்.
45. என்னைப் பிடித்த இடறெல்லாம் - அட
இன்றோ பொழிந்து போகட்டும்; (என்)
எண்ணம் எல்லாம் ஈடேற - அட
எதிர்புகள் எல்லாம் சாகட்டும்.
என் வாழ்வில்
இன்பம் பொங்கட்டும்;
இனிமை தங்கட்டும்;
புதியபாதை அமையட்டும்;
பொற்காலம் மலரட்டும்.
எங்க வந்த முறுக்கா
அட மூடா மூடா உனக்கு - இந்த
புத்தி இருப்பது எதுக்கு?
2. அன்பு என்று சொல்லக் கொண்டு
அலையுது உன் மனசு - அட
அன்பு என்று சொல்வ தெல்லாம்
அந்தக் காலப் பழசு.
3. முன்ன ஒன்னு பின்ன ஒன்னு
சொல்வது தான் புதுசு - அட
முதுகில தான் மொய்க்கும் இந்த
ஈக்கள் பல தினுசு.
4. அண்ணன் எனத் தங்கை என
வாழ்ந்த கதை எல்லாம் - அட
அடுப்பங் கரை சாம்பல் என
ஆறிப் போன பின்னே,
5. தொடச் செடுத்து அள்ளிக் கொண்டு
தூரக் கொட்டு பெண்ணே - அட
தூசி யாகப் பறந்து வரும்
தூர விலகு கண்ணே!
6. இடிச்ச புளிய எடுத்து வச்ச
ஓலக் கொட்டான் போல - அட
ஒடிஞ்சு விழுந்த மனசுக் கென்ன
ஒட்டுப் போடுற வேல.
7. ஒட்டுப் போட ஒட்டுப் போட
ஒடைஞ்சு போற கம்பு - அட
எட்டத் தூக்கி எறிஞ்சு விடு
எதுக்கு இந்த வம்பு.
8. பட்டுப் போன இலை நொறுங்கிப்
பாட்டுப் பாடும் பாரு - அட
விட்டுப் போன உறவை எண்ணி
விசும்பி நிற்பது யாரு?
9. மொட்டுப் போல மன சிருந்தா
வாசம் எப்படி வீசும்? – அட
மொட்டு மெல்ல மலர்ந்த போது
தென்றல் வந்து பேசும்.
10. வண்ண வண்ணக் கனவுகளை
வரைஞ்சு வச்ச கையே - அட
வக்கரித்துக் கொட்டி விடும்
வரைஞ்ச படத்தில் மையே.
11. திண்ணத் திண்ணத் திகட்டி விடும்
தீஞ்சுவைகள் எல்லாம் - அட
தின்ற பிறகு புத்தி வந்து
தெரிவது தான் எல்லாம்.
12. ஒன்னும் ஒன்னும் சேரும் போது
ஒன்னு ரெண்டா மாறும் - அட
ஒன்னம் ஒன்னும் பெருக்கும் போது
ஒன்னு தானே தேரும்.
13. ஒன்னப் போல உலகைப் போல
நானிருக்க மாட்டேன் - அட
ஒன்றை யேனும் செய்தி டாமல்
உசிரை விட மாட்டேன்.
14. வெம்பிப் போன பிஞ்சு லேயும்
விதை இருக்குது பாரு - அட
விதைகளுக்குள் ஒழிஞ்சு இறக்கிற
விதைகள் எத்தனை கூறு?
15. தும்பை விட்டு வாலைப் பிடிக்கும்
புத்திசாலிக் கூட்டம் - அட
தூக்கி எற்ஞ்ச பந்துகள் தான்
துள்ளிக் குதிக்கும்; ஆட்டம்.
16. தும்பி எல்லாம் பூவை விட்டுத்
தூர விரலகிப் பேனா - அட
துன்ப மெல்லாம் ஓடிவிடும்
தூக்கம் வரும் தானா.
17. நம்பி வந்த நடு வழியில
நாலு பாதை பிரிஞ்சா - அட
நம்ம வழிய நாம பாத்து
நடக்க வேணும் தெரிஞ்சா.
18. கட்டுப் போட கட்டுப் போட
ஆறிப் போகும் புண்ணு - அட
கட்டுச் சோத்துல எலிய வச்சுக்
கட்ட லாமா கண்ணு?
ஒட்டி வளரும் களைதான் - அட
வெட்டிப் பயல் உனக் கெதுக்கு
வெடித்த பலாச் சுளைதான்.
தாங்கிப் பிடிக்கும் வயசு - அட
குட்டி விடக் குட்டி விடக்
குனிஞ்சு கொடுக்கும் மனசு
21. எட்டி உதைச்ச கால் களிலே
என்ன வசியம் வச்சியோ - அட
எழுந்து வந்து கால டியில்
ஏனோ தவம் கிடக்கிறேன்.
22. உரசி உரசி பாத்த முன்னா
தங்கம் கரைஞ்சு போகும் - அட
உரசா மலே எடுத்த முன்னா
பித்தளை கலந்து போகும்.
23. உரசும் போது மனசுக் குள்ளே
எழுந்து நிக்கிற ஆச - அட
விரசம் ஒன்னு வந்து விட்டா
விழுந்து விடும் பூச.
24. ஒன்னு போல ஒன்னு இருந்தா
மாற்றம் எப்படித் தெரியும் - அட
மாற்றம் இல்லா வாழ்க்கை யிலே
மகிழ்ச்சி எப்படி விரியும்?
25. என்னப் போல உன்னப் போல
யாரும் இருக்க வேண்டாம் - அட
என்ன நமக்கு நடந்த தென்று
யாரும் அறிய வேண்டாம்.
26. நாயும் நரியும் நட்பு என்று
நம்பி வந்த மானே - அட
நாளை நீயும் நாய் நரியின்
நல்ல வேட்டை தானே.
27. நீயும் நானும் சிரித்த தெல்லாம்
போலி யான வேசம் - அட
போயும் போயும் நமக் கெதுக்குப்
புனித மான பாசம்?
28. தாயும் சேயும் சேர்ந்து போனா
தாரு மாறா ஏசும் - அட
வாயும் வயிறும் வேறு என்று
தத்து வங்கள் பேசும்.
29. போயும் போயும் இந்த உலகில்
நான் இருக்க லாமா? - அட
நீயும் கூட என்ன விட்டுப்
போயி ருக்கலாமா?
30. தேயும் அந்த நிலவினை நான்
தேடித் தேடித் திரிகிறேன் - அட
தேய்ந்து நிலவு வளரும் போது
தேய்ந்து நானும் மடிகிறேன்.
31. சாய்ந்த மரம் காய்ந்த தனால்
வேரின் மீது வெறுப்பு – அட
காய்ந்த மரம் சாய்ந்த தற்குக்
கிளை களன்றோ பொறுப்பு.
32. பாய்ந்த புலி பதுங்கு வதால்
பாய்வ தற்கா தயக்கம் - அட
படுத்து றங்கப் போவது போல்
பாசாங்கு மயக்கம்.
33. ஓய்ந்து மனம் உலன்று தினம்
ஒடுங்கி விடும் வேளை - அட
ஆய்ந்து அறிய முடியாமல்
அடங்கி விடும் நாளை.
34. ஏதுக்கடா இப்படி நான்
ஏளனமாய்ப் போனேன் - அட
தீது செய்த பாவியைப் போல்
திட்டி விரட்ட லானேன்.
35. ஓதி வைத்த இலக்க ணங்கள்
உதவ வில்லை எனக்கு - அட
பாதிப் பாடம் படித்த தனால்
பயனும் இல்லை உனக்கு.
36. போது மடா இது வரையில்
புலம்பி அழுத தெல்லாம் - அட
தூது போக யாரு மில்ல
தூய உறவு சொல்ல.
37. மோது தடா விழி இரண்டில்
மோக னமாய்த் தூக்கம் - அட
மேதி னியில் எனக் கிருக்குது
எத்த னையோ ஏக்கம்;
38. விட்டு மனம் வெறுத் தவளை
விலகி விட முடியுமா? - அட
விருப்பம் இல்லை என்று சொல்லி
உசிரை விட முடியுமா?
39. நீரடித்து நீர் விலக
நீள் நிலத்தில் முடியுமா? - அட
நீ அடித்து நான் அழுக
நீயும் சிரிக்க முடியுமா?
40. ஊர் சிரிக்கும் வாய் அடக்க
மூடி செய்ய முடியமா? - அட
தேர் இழுக்கும் வடம் திரிக்க
நார் உரிக்க முடியுமா? – கல்
நார் உரிக்க முடியுமா?
நாம் பிரிய லாகுமா? - அட
உயிர் இருக்கும் வரை நாமும்
உடன் பிறப்பு அல்லவா!
42. எங்கோ ஏதோ இடிக்கிறது - அட
ஏனோ என்மனம் துடிக்கிறது
பங்கோ பகையோ அடிக்கிறது - அட
பாசம் என்றே நடிக்கிறது.
43. மாற்றம் ஒன்று வரவேண்டு - அட
மாட்சிமை எல்லாம் தரவேண்டும்;
ஏற்றம் எனக்கு வரவேண்டும் - அட
ஏக்கம் தீர வரம்வேண்டும்.
44. காலம் இனியும் கடத்தாதே - அட
காரியம் தவறாய் நடத்தாதே;
ஞாலம் முழுதும் இடம் வேண்டும் - அட
நாளும் எனக்கு நலம் வேண்டும்.
45. என்னைப் பிடித்த இடறெல்லாம் - அட
இன்றோ பொழிந்து போகட்டும்; (என்)
எண்ணம் எல்லாம் ஈடேற - அட
எதிர்புகள் எல்லாம் சாகட்டும்.
என் வாழ்வில்
இன்பம் பொங்கட்டும்;
இனிமை தங்கட்டும்;
புதியபாதை அமையட்டும்;
பொற்காலம் மலரட்டும்.
0 comments:
Post a Comment