நீள்கவிதை

அண்ணன் மாரே தம்பி மாரே
    கொஞ்சம் நில்லுங்க
ரெம்ப அநியாயம் நடக்குதுங்க
    சொன்னாக் கேளுய்க.

எண்ணி எண்ணி உழச்சவங்க
    ஏழைகளா ரோட்டிலே – அட
ஏமாத்திப் பொழைச்சவங்க
    எண்ணுராக நோட்டுக.

தண்ணி வித்து பன்னி வித்து
    பணத்த ரொம்ப புறட்டுரான் - அட
தட்டுக்கெட்ட கூட்டத்தையே
    ஓட்டுப் போடத் திறட்டுறான்.

கண்ணியமா நடக்கச் சொல்லி
    காது கிழியக் கத்துரான் - அட
கத்திப் போட்டு கடத்தெருவில்
    கள்ள நோட் அடிக்கிறான்.

புண்ணியமா தொண்டு செஞ்சா
    புழுதி வாரி எரைக்கிறான் - அட
புத்திமதி சொன்ன முன்னா
    புரிஞ்சுக்காம மொறைக்கிறான்.

திண்ண சோறு செமிக்க லண்ணு
    மாத்திரைக முழுங்குறான் - அட
மாத்திரையுஞ் செமிக்கலன்னு
    மருந்து வாங்கிக் குடிக்கிறான்.

தென்னையிலே கள்ளிறக்கித்
    தீருமட்டுங் குடிக்கிறான் - அட
திண்ணையிலே படுத்துறங்கி
    தேவதாஸா நடிக்கிறான்.

பண்ணையிலே உழைச்சவங்க
    பருக்கையத்தான் பாக்கலே – அட
பாடுபட்ட கூலியத்ததான்
    பண்ணையாரு கொடுக்கலே;

பண்ணையாரு பட்டுலதான்
    மடிப்பு இன்னும் மாறலே – அட
பாட்டாளி இடுப்புலயோ
    பழையதுணி மாறலே

மண்மேடு திருத்தியதில்
    மாளிகைகள் கட்டினான் - அட
மழைபேயும் வேளையிலே
    மரத்தடியில் ஒட்டினான்.

வேசம் போட்டு நடிச்சவங்க
    வெல்வெட்டில் நடக்கிறான் - அட
கோசம் போட்டுக் கொடிபுடுச்ச
    கூட்டம் ரோட்டில் கிடக்குறான்

நாசமான கட்சியிலே
    நாலு பேரு இருக்கிறான் - அட
நாலு நாளில் பிரிஞ்சு போயி
    நாலு கட்சி அமைக்கிறான்.

தூசு தட்டித் தொடச்சு எடுத்து
    கொள்கைகள் விளக்குறான் - அட
துண்டுகள மாத்திப் போட்டு
    தோழமைய வளக்குறான்.

காசு கேட்டு நடுத்தெருவுல
    உண்டியலக் குலுக்குறான் - அட
சோலிச உண்டியல
    சோத்துக்காக உடைக்கிறான்.

ஏசு புத்தன் காந்தி என்று
    என்னனன்னமோ அளக்குறான் - அட
இளிச்ச வாயன் தலையிலதான்
    இழுத்து வச்சு அறைக்கிறான்.

கதரு வேட்டிக் காரனுக்கு
    காந்தியத் தான் தெரியல – அட
கதறிஅழும் ஏழைகளின்
    கண்ணீருந்தான் மறையல

பேசும் போது இலக்கணத்த
    வீசுறதில் சூரன் தான் - அட
பித்தலாட்டஞ் செய்யுறதில்
    பிறவியிலே வீரன்தான்

கலப்படங்கள் செஞ்சு செஞ்சு
    கடத்தெருவில் விக்குறான் - அட
காவல்துறை காரங்க எல்லாம்
    காவ காத்து நிக்குறான்

பழுப்படஞ்ச அரிசியிலே
    பாதாங்கீரு பண்ணுறான் - அட
பச்சத் தண்ணி கூட ஒரு
    பத்துக் காசு என்னுறான்

உளுத்துப் போன பருப்புலயும்
    உளுந்தவடை பண்ணுறான் - அட
ஊசிப்போன பட்சணத்த
    ஒருவராமா விக்குறான்.

கொழுத்துப் போன பட்லருக்கு
    காசு ஏதுங் குடுக்கலன்னா
மொறைச்சு மெல்ல பாத்து நம்ம
    எச்சிலையே துப்புறான்.

கழுத்துவர சாப்பிடல
    கால் வயிறு நெம்பிடல – அட
கடமுடான்னு வந்த சத்தம்
    மூச்சுவிட முடியலயே

நடைப்பிணமாய் அலைவதுதான்
    நாகரீகப் போதையா – அட
நல்லவர்கள் சொன்னவழி
நாமவந்த பாதையா?

குடைபிடித்து உன்முதுகில்
    குதிரையேறக் குனிவதா? – அட
முதலாளி என்று சொல்லி
    முழந்தாளில் பணிவதா?

தொடை இடுக்கில் கைபுதைத்துத்
    தூங்குவதும் ஏனடா – அட (ஒரு)
தோட்டாவாய்ப் புற்ப்பட்டால்
    தோல்வியதும் ஏதடா?

படைதிறண்டு வந்துநாமும்
    பயணத்தைத் தொடங்குவோம் - அட
புதிதாக இனியேனும்
    மனிதருக்குள் அடங்குவோம்.

0 comments:

Post a Comment