அண்ணன் மாரே தம்பி மாரே
கொஞ்சம் நில்லுங்க
ரெம்ப அநியாயம் நடக்குதுங்க
சொன்னாக் கேளுய்க.
எண்ணி எண்ணி உழச்சவங்க
ஏழைகளா ரோட்டிலே – அட
ஏமாத்திப் பொழைச்சவங்க
எண்ணுராக நோட்டுக.
தண்ணி வித்து பன்னி வித்து
பணத்த ரொம்ப புறட்டுரான் - அட
தட்டுக்கெட்ட கூட்டத்தையே
ஓட்டுப் போடத் திறட்டுறான்.
கண்ணியமா நடக்கச் சொல்லி
காது கிழியக் கத்துரான் - அட
கத்திப் போட்டு கடத்தெருவில்
கள்ள நோட் அடிக்கிறான்.
புண்ணியமா தொண்டு செஞ்சா
புழுதி வாரி எரைக்கிறான் - அட
புத்திமதி சொன்ன முன்னா
புரிஞ்சுக்காம மொறைக்கிறான்.
திண்ண சோறு செமிக்க லண்ணு
மாத்திரைக முழுங்குறான் - அட
மாத்திரையுஞ் செமிக்கலன்னு
மருந்து வாங்கிக் குடிக்கிறான்.
தென்னையிலே கள்ளிறக்கித்
தீருமட்டுங் குடிக்கிறான் - அட
திண்ணையிலே படுத்துறங்கி
தேவதாஸா நடிக்கிறான்.
பண்ணையிலே உழைச்சவங்க
பருக்கையத்தான் பாக்கலே – அட
பாடுபட்ட கூலியத்ததான்
பண்ணையாரு கொடுக்கலே;
பண்ணையாரு பட்டுலதான்
மடிப்பு இன்னும் மாறலே – அட
பாட்டாளி இடுப்புலயோ
பழையதுணி மாறலே
மண்மேடு திருத்தியதில்
மாளிகைகள் கட்டினான் - அட
மழைபேயும் வேளையிலே
மரத்தடியில் ஒட்டினான்.
வேசம் போட்டு நடிச்சவங்க
வெல்வெட்டில் நடக்கிறான் - அட
கோசம் போட்டுக் கொடிபுடுச்ச
கூட்டம் ரோட்டில் கிடக்குறான்
நாசமான கட்சியிலே
நாலு பேரு இருக்கிறான் - அட
நாலு நாளில் பிரிஞ்சு போயி
நாலு கட்சி அமைக்கிறான்.
தூசு தட்டித் தொடச்சு எடுத்து
கொள்கைகள் விளக்குறான் - அட
துண்டுகள மாத்திப் போட்டு
தோழமைய வளக்குறான்.
காசு கேட்டு நடுத்தெருவுல
உண்டியலக் குலுக்குறான் - அட
சோலிச உண்டியல
சோத்துக்காக உடைக்கிறான்.
ஏசு புத்தன் காந்தி என்று
என்னனன்னமோ அளக்குறான் - அட
இளிச்ச வாயன் தலையிலதான்
இழுத்து வச்சு அறைக்கிறான்.
கதரு வேட்டிக் காரனுக்கு
காந்தியத் தான் தெரியல – அட
கதறிஅழும் ஏழைகளின்
கண்ணீருந்தான் மறையல
பேசும் போது இலக்கணத்த
வீசுறதில் சூரன் தான் - அட
பித்தலாட்டஞ் செய்யுறதில்
பிறவியிலே வீரன்தான்
கலப்படங்கள் செஞ்சு செஞ்சு
கடத்தெருவில் விக்குறான் - அட
காவல்துறை காரங்க எல்லாம்
காவ காத்து நிக்குறான்
பழுப்படஞ்ச அரிசியிலே
பாதாங்கீரு பண்ணுறான் - அட
பச்சத் தண்ணி கூட ஒரு
பத்துக் காசு என்னுறான்
உளுத்துப் போன பருப்புலயும்
உளுந்தவடை பண்ணுறான் - அட
ஊசிப்போன பட்சணத்த
ஒருவராமா விக்குறான்.
கொழுத்துப் போன பட்லருக்கு
காசு ஏதுங் குடுக்கலன்னா
மொறைச்சு மெல்ல பாத்து நம்ம
எச்சிலையே துப்புறான்.
கழுத்துவர சாப்பிடல
கால் வயிறு நெம்பிடல – அட
கடமுடான்னு வந்த சத்தம்
மூச்சுவிட முடியலயே
நடைப்பிணமாய் அலைவதுதான்
நாகரீகப் போதையா – அட
நல்லவர்கள் சொன்னவழி
நாமவந்த பாதையா?
குடைபிடித்து உன்முதுகில்
குதிரையேறக் குனிவதா? – அட
முதலாளி என்று சொல்லி
முழந்தாளில் பணிவதா?
தொடை இடுக்கில் கைபுதைத்துத்
தூங்குவதும் ஏனடா – அட (ஒரு)
தோட்டாவாய்ப் புற்ப்பட்டால்
தோல்வியதும் ஏதடா?
படைதிறண்டு வந்துநாமும்
பயணத்தைத் தொடங்குவோம் - அட
புதிதாக இனியேனும்
மனிதருக்குள் அடங்குவோம்.
கொஞ்சம் நில்லுங்க
ரெம்ப அநியாயம் நடக்குதுங்க
சொன்னாக் கேளுய்க.
எண்ணி எண்ணி உழச்சவங்க
ஏழைகளா ரோட்டிலே – அட
ஏமாத்திப் பொழைச்சவங்க
எண்ணுராக நோட்டுக.
தண்ணி வித்து பன்னி வித்து
பணத்த ரொம்ப புறட்டுரான் - அட
தட்டுக்கெட்ட கூட்டத்தையே
ஓட்டுப் போடத் திறட்டுறான்.
கண்ணியமா நடக்கச் சொல்லி
காது கிழியக் கத்துரான் - அட
கத்திப் போட்டு கடத்தெருவில்
கள்ள நோட் அடிக்கிறான்.
புண்ணியமா தொண்டு செஞ்சா
புழுதி வாரி எரைக்கிறான் - அட
புத்திமதி சொன்ன முன்னா
புரிஞ்சுக்காம மொறைக்கிறான்.
திண்ண சோறு செமிக்க லண்ணு
மாத்திரைக முழுங்குறான் - அட
மாத்திரையுஞ் செமிக்கலன்னு
மருந்து வாங்கிக் குடிக்கிறான்.
தென்னையிலே கள்ளிறக்கித்
தீருமட்டுங் குடிக்கிறான் - அட
திண்ணையிலே படுத்துறங்கி
தேவதாஸா நடிக்கிறான்.
பண்ணையிலே உழைச்சவங்க
பருக்கையத்தான் பாக்கலே – அட
பாடுபட்ட கூலியத்ததான்
பண்ணையாரு கொடுக்கலே;
பண்ணையாரு பட்டுலதான்
மடிப்பு இன்னும் மாறலே – அட
பாட்டாளி இடுப்புலயோ
பழையதுணி மாறலே
மண்மேடு திருத்தியதில்
மாளிகைகள் கட்டினான் - அட
மழைபேயும் வேளையிலே
மரத்தடியில் ஒட்டினான்.
வேசம் போட்டு நடிச்சவங்க
வெல்வெட்டில் நடக்கிறான் - அட
கோசம் போட்டுக் கொடிபுடுச்ச
கூட்டம் ரோட்டில் கிடக்குறான்
நாசமான கட்சியிலே
நாலு பேரு இருக்கிறான் - அட
நாலு நாளில் பிரிஞ்சு போயி
நாலு கட்சி அமைக்கிறான்.
தூசு தட்டித் தொடச்சு எடுத்து
கொள்கைகள் விளக்குறான் - அட
துண்டுகள மாத்திப் போட்டு
தோழமைய வளக்குறான்.
காசு கேட்டு நடுத்தெருவுல
உண்டியலக் குலுக்குறான் - அட
சோலிச உண்டியல
சோத்துக்காக உடைக்கிறான்.
ஏசு புத்தன் காந்தி என்று
என்னனன்னமோ அளக்குறான் - அட
இளிச்ச வாயன் தலையிலதான்
இழுத்து வச்சு அறைக்கிறான்.
கதரு வேட்டிக் காரனுக்கு
காந்தியத் தான் தெரியல – அட
கதறிஅழும் ஏழைகளின்
கண்ணீருந்தான் மறையல
பேசும் போது இலக்கணத்த
வீசுறதில் சூரன் தான் - அட
பித்தலாட்டஞ் செய்யுறதில்
பிறவியிலே வீரன்தான்
கலப்படங்கள் செஞ்சு செஞ்சு
கடத்தெருவில் விக்குறான் - அட
காவல்துறை காரங்க எல்லாம்
காவ காத்து நிக்குறான்
பழுப்படஞ்ச அரிசியிலே
பாதாங்கீரு பண்ணுறான் - அட
பச்சத் தண்ணி கூட ஒரு
பத்துக் காசு என்னுறான்
உளுத்துப் போன பருப்புலயும்
உளுந்தவடை பண்ணுறான் - அட
ஊசிப்போன பட்சணத்த
ஒருவராமா விக்குறான்.
கொழுத்துப் போன பட்லருக்கு
காசு ஏதுங் குடுக்கலன்னா
மொறைச்சு மெல்ல பாத்து நம்ம
எச்சிலையே துப்புறான்.
கழுத்துவர சாப்பிடல
கால் வயிறு நெம்பிடல – அட
கடமுடான்னு வந்த சத்தம்
மூச்சுவிட முடியலயே
நடைப்பிணமாய் அலைவதுதான்
நாகரீகப் போதையா – அட
நல்லவர்கள் சொன்னவழி
நாமவந்த பாதையா?
குடைபிடித்து உன்முதுகில்
குதிரையேறக் குனிவதா? – அட
முதலாளி என்று சொல்லி
முழந்தாளில் பணிவதா?
தொடை இடுக்கில் கைபுதைத்துத்
தூங்குவதும் ஏனடா – அட (ஒரு)
தோட்டாவாய்ப் புற்ப்பட்டால்
தோல்வியதும் ஏதடா?
படைதிறண்டு வந்துநாமும்
பயணத்தைத் தொடங்குவோம் - அட
புதிதாக இனியேனும்
மனிதருக்குள் அடங்குவோம்.
0 comments:
Post a Comment