புதுக்கவிதை 3

சந்தனப் பொய்கையில் சாமரம் வீசியா
    மாருதம் வருகிறது? – மந்த
மாருதம் வருகிறது?

காலையில் சேவலும் கூவியா வானிலே
    சூரியன் எழுகிறது? – ஒளிச்
சூரியன் எழுகிறது?

மாங்குயில் கூவிடும் மாமரச் சோலையில்
    வீணையும் எதற்காக? - இசை
வீணையும் எதற்காக?

மாந்தளிர் மேனியாள் மங்கையின் மார்பிலே
    மாலைகள் விழவேண்டும் - திருமண
மாலைகள் விழவேண்டும்.

காமனைக் கும்பிடும் கயவர்கள் மத்தியல்
    காதலும் எதற்காக? உயர்
காதலும் எதற்காக?

மனிதரை மனிதரே மதித்திடா உலகினில்
    பிறவியம் எதற்காக? மானிடப்
பிறவியும் எதற்காக?

0 comments:

Post a Comment