சந்தனப் பொய்கையில் சாமரம் வீசியா
மாருதம் வருகிறது? – மந்த
மாருதம் வருகிறது?
காலையில் சேவலும் கூவியா வானிலே
சூரியன் எழுகிறது? – ஒளிச்
சூரியன் எழுகிறது?
மாங்குயில் கூவிடும் மாமரச் சோலையில்
வீணையும் எதற்காக? - இசை
வீணையும் எதற்காக?
மாந்தளிர் மேனியாள் மங்கையின் மார்பிலே
மாலைகள் விழவேண்டும் - திருமண
மாலைகள் விழவேண்டும்.
காமனைக் கும்பிடும் கயவர்கள் மத்தியல்
காதலும் எதற்காக? உயர்
காதலும் எதற்காக?
மனிதரை மனிதரே மதித்திடா உலகினில்
பிறவியம் எதற்காக? மானிடப்
பிறவியும் எதற்காக?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment