ஆசிறியர் ஆசிரியராக......

அறியாமை இருளகல
அவதரித்த ஆன்மாவே!
நெறியான வழிநீயும்
நின்றொழுக வேண்டாவா!

தெய்வதமே தொழத்தக்க
தெய்வீகம் உனக்குள்ளே
நெய்தீபம் போல்நெஞ்சில்
நின்றெரிய வேண்டாவா!

கையளவு கற்றதிலே
காலளவு கற்பிக்கும்
கடனறிந்து கொண்டுதினம்
கற்றறிய வேண்டாவா!

வழிகாட்டும் விழியாக
விழிபேசும் மொழியாக
ஒளிதீபம் நீயாக
வலியறிய வேண்டாவா!

விதையே நீயாகி
விதைகளுக்குள் விதைக்கின்ற
வித்தையினை நீயறிந்து
வினைசெய்ய வேண்டாவா!

நீயறிந்து கொண்டதனை
நேர்படவே அறிவிக்கும்
நேர்த்தியினை நீயறிந்து
நேர்படவும் வேண்டாவா!

மாணவனே நீயாகி
மாணவனே ஆசானாய்
மனப்பாடம் செய்தேநீ
மாண்புறவும் வேண்டாவா!

வீணே பொழு‌‌தோட்டி
வெறுங்கதைகள் பேசிதினம்
நீனே இருக்கின்ற
நிலைமாற வேண்டாவா!

சாகாத இலக்கியத்தின்
சரித்திரமாய் எந்நாளும்
ஆசானே நீநின்று
அருள்புரிய வேண்டாவா!

ஆதாரம் நீயாகி
அவதாரம் தானாகி
தீயோரும் தொழத்தக்க
திருவாக வேண்டாவா!

(நல்ல ஆசான்களுக்கு மட்டும் நல்வாழ்த்துக்கள்)

0 comments:

Post a Comment