வெளிச்சம்

காயப்பட்ட கண்களில்
காணாமல் போனது காட்சி
கசியும்
கண்ணீர்த் தாரைகளில்
கரைந்தது கனவு;

விளிம்பில் நின்றபடி
விசனப்பட்டது
வாழ்க்கை;

தடயங்களைத் தேடித்
தடவிய கைகளில்
தைரியம் தந்தது
மனசு;

காலத்தின் கல்லறையில்
கண்சிமிட்டும்
வெற்றியின் வெளிச்சம்.

2 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

Great lines...

Anonymous said...

its very nice, it is very useful while i felt sad


by

kavithai yetcham

Post a Comment