ஏதுக்குப் பெண் பெற்றாய்?

ஓம்பொன்னு
சமஞ்சாளா?
உறுப்படியாச்
சமைப்பாளா?
ஏம்பையன் நிறத்துக்கு
எடுப்பா இருப்பாளா?
ஆணழகன்
என்பதனால்
அவன் கொஞ்சம்
கருப்பு தான்;
மீனழகி
நிறமென்ன
எலுமிச்சம் பழம் தானே!
அதுக்கே தரவேணும்
அறுபது சவரன்தான்;
இதுக்கே பயந்தாக்க
ஏதுக்குப் பெண் பெற்றாய்?

2 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

இனிய ரம்ஜான் நல்வாழ்துக்கள் ..

கவிதை அருமை..

கவிதை கேளுங்கள் said...

yathartham

by

kavithai yetcham

Post a Comment