துளிப்பாக்கள் 9

பத்தர்கள் கூட்டம்
எண்ண முடியவில்லை;
கம்பி எண்ணியது காவி.

****** 
காவியைச் சுற்றிக் காவலர்கள்
நீதி தேவதை நெளிந்தாள்;
பார்வையில் கற்பழிப்பு.

****** 
கற்பழிப்பு வழக்கு
சாட்சி இல்லை இதற்கு
விடுதலையானது காமம்.

****** 
காம வெறியன்
தப்பித்துக் கொண்டான்
“கல்லாய்” அழுதாள் கண்ணகி.

****** 
ஏக்கத்தோடு பக்தை
சிரித்துக் கொண்டே சாமியார்
சிலிர்த்தன சிறைக்கம்பிகள்.

0 comments:

Post a Comment