துளிப்பாக்கள் 2

பரிசுக் குவியலுக்குள்.....
கசங்கிக் கிடந்தது
வாழ்த்துக் கவிதை.

******
மகளுக்கு வளைகாப்பு.....
பிரசவ வலியில் -
தாய்.

******
கற்பூரத்தட்டில் காசைப் பார்த்தான் – பூசாரி
கருவறையில் கடவுளைப் பார்த்தான் – பக்தன்
எதையுமே பார்க்கவில்லை – கடவுள்.

******
ஒதுக்கீடு வேண்டாம்;
சலுகைகள் வேண்டாம்;
சாதியும் வேண்டாம்.

******
வலையில் சிக்குமா?
நீரில் மிதக்கும் -
நிலா.

 ******
அடிக்கும் போது வேடிக்கை;
அடங்கிய போது ஆர்ப்பாட்டம்;
அடடா அரசியல் வாடிக்கை.

0 comments:

Post a Comment