கசங்கிக் கிடந்தது
வாழ்த்துக் கவிதை.
******
மகளுக்கு வளைகாப்பு.....பிரசவ வலியில் -
தாய்.
******
கற்பூரத்தட்டில் காசைப் பார்த்தான் – பூசாரிகருவறையில் கடவுளைப் பார்த்தான் – பக்தன்
எதையுமே பார்க்கவில்லை – கடவுள்.
******
ஒதுக்கீடு வேண்டாம்;சலுகைகள் வேண்டாம்;
சாதியும் வேண்டாம்.
******
வலையில் சிக்குமா?நீரில் மிதக்கும் -
நிலா.
******
அடிக்கும் போது வேடிக்கை;அடங்கிய போது ஆர்ப்பாட்டம்;
அடடா அரசியல் வாடிக்கை.
0 comments:
Post a Comment