துளிப்பாக்கள் 3

தரிசு நிலத்தில்
உழைத்துக் க(ளை)ளித்தான்,
விளைந்த பயிரில் வியர்வைத் துளிகள்.

******
சேறும் சகதியுமாய்
வண்ணத்துப் பூச்சிகள்
நாற்று நடும் பெண்கள்.

******
வரப்பு கட்டி
வரம்பு கட்டினர்
வற்றிப் போனது வாய்க்கால்.

******
நேற்று வயல்.....
இன்று தரிசு.....
நாளை - ரியல் எஸ்டேட்.

******
நேற்று வழக்கு.....
இன்று வாய்தா.....
நாளை - மறுவாய்தா.

******
நேற்று இட்லி.....
இன்று உப்புமா.....
நாளை - பட்டினி.

0 comments:

Post a Comment