துளிப்பாக்கள் 4

நேற்று குழந்தை
இன்று குமரி
நாளை - அடிமை/அரசி.

****** 
இந்தச் சந்தையில்
எல்லாம் கிடைக்கும்
எனக்குத் தேவை – அம்மா அப்பா.

******
தூரம் அதிகமென்ற
துயரம் ஏதுமில்லை
ஹலோ...... ஹலோ......

******
மணியைப் பார்த்து
மணியை அடித்தான்
மணிப்பொறிக்கு ஓய்வில்லை.

******
ராமனும் லட்சுமணனும்
அடித்துக் கொண்டார்கள்
ராவணன் மனைவி யாருக்கென்று.

******
கண்ணகியா சீதையா?
பட்டிமன்றத்தில் –
பாஞ்சாலி சபதம்.

1 comments:

மதுரை சரவணன் said...

//ராமனும் லட்சுமணனும்
அடித்துக் கொண்டார்கள்
ராவணன் மனைவி யாருக்கென்று.//

மிக அருமை. வாழ்த்துக்கள்

Post a Comment