எத்தனை எத்தனை
வரவேற்புகள்.....
மாநகராட்சி
அன்புடன் வரவேற்கிறது.....
தொலைத்தொடர்ப்புத் துறை
பிரியமுடன் வரவேற்கிறது.....
சரவணபவனும்
முனியாண்டி விலாசும்
முந்திக் கொண்டு வரவேற்கின்றன.....
எல்.ஐ.சி..... ஏ.வி.எம்..... ஆர்.எம்.கே.வி.....
எவையெவையோ வரவேற்கின்றன.....
நான்
ஆசையாய்த் தேடிப்போன
என் பிள்ளை கேட்டான் -
'எதற்கு வந்தாய்?'
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமையான கவிதை...
கனிகளுக்கு ஆசைப்படலாமா வேர்?
Post a Comment