கிணற்றுத் தவளைக்கு நீரில்லை;
அமைதியாய் அழுதது ஆகாயம்.
******
குருவியின் கூடு
குடியிருந்தது கூகைஆணையிட்டது அமெரிக்கா.
******
தட்டேந்த வில்லைதவமிருக்க வில்லை
தாராளமயம் வேண்டாம்.
******
புத்தகக் கடைவிற்றுத் தீர்ந்தன
பீடி, சிகரட்.
******
உச்சி வெயில்தண்ணீர்ப் பழம்
தாகம் தீர்த்தன ஈக்கள்.
******
எங்கே எதற்குப் பயணம்ஏதும் அறியாது விழிக்கும்
லாரியில் அடிமாடுகள்.
******
வேசம் போட்டார்கள்கோசம் போட்டார்கள்
வினாவாய் விடியல்.
0 comments:
Post a Comment