துளிப்பாக்கள் 12

அவரவர் சாமியை
அவரவர் வேண்டியே
கூடி உண்போம் கூட்டாஞ்சோறு.


******
சவப்பெட்டிகள் சாட்சிகள் ஆயின
விரைத்துக் கிடந்தன புத்தகங்கள்
அமைதி காத்தார் நூலகர்.


******
பதைபதைப்போடு பிரித்தனர்
பாட்டியின் சுருக்குப்பை
சிரித்தன செல்லாக் காசுகள்.


******
முயற்சி திருவினை ஆக்குமா?
பிணத்தின் பின்னால்
பிதா மகன்கள்.


******
உதடுகளுக்குள்
ஒழிந்து கிடக்கின்றன
உண்மையின் உதடுகள்.


******
ஊராட்சி மன்றங்களிலிருந்து
உலக வங்கி வரை
உலா வருகிறார்கள் ஒசாமாக்கள்.

1 comments:

மதுரை சரவணன் said...

அனைத்தும் அற்புதம்...வாழ்த்துக்கள்

Post a Comment