கண்ணுக்கு விருந்தான
கற்பகச் சிலையே – உன்
அற்புதம் நான்பாடுவேன் – பெண்ணே
அற்புதம் நான்பாடுவேன்.
கற்பனை வடிவான
காரிகை உன்னழகை
எப்படிக் கவிபாடுவேன் – பெண்ணே
எப்படிக் கவிபாடுவேன்.
சேயிழை உன்னழகைச்
செப்பிட நானென்ன
கம்பனின் அவதாரமா? – பெண்ணே
கம்பனின் அவதாரமா?
கூந்தல் அசைந்தாடக்
குறுநகை புரிந்தேநீ
நெஞ்சத்தைத் தாலாட்டுவாய் – பெண்ணே
நெஞ்சத்தைத் தாலாட்டுவாய்.
மாதுளை நிறமொத்த
மாங்கனி உனையென்று
மஞ்சத்தில் நீராட்டுவேன்? – பெண்ணே
மஞ்சத்தில் நீராட்டுவேன்?
உன்முகம் பார்க்கின்ற
ஒவ்வொரு நொடிப்போதும்
என்னுயிர் பறந்தோடுதே – பெண்ணே
என்னுயிர் பறந்தோடுதே.
பார்வையில் பகலாகி
ஆசையின் கனவான
ஆனந்த விடிவெள்ளிநீ – பெண்ணே
ஆனந்த விடிவெள்ளிநீ.
பயணத்தில் நான்பார்த்த
பாவையர் பலருள்ளும்
தேவதை நீதானடி – பெண்ணே
தேவதை நீதானடி.
தேவியே உன்காதல்
தேங்கிய என்நெஞ்சில்
நீயொரு பெண்பெட்டகம் – பெண்ணே
நீயொரு பொண்பெட்டகம்.
சுந்தரத் தமிழேயென்
நாவினில் நீயிருந்து
களிநடம் புரிவாயடி – பெண்ணே
களிநடம் புரிவாயடி.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
//சுந்தரத் தமிழேயென்
நாவினில் நீயிருந்து
களிநடம் புரிவாயடி – பெண்ணே
களிநடம் புரிவாயடி.//
அருமை. வாழ்த்துக்கள்
Post a Comment