• ஊருக்கு மட்டும்தான்
உறவென்ற சொல்லுண்டு,
உறவுக்காய் அன்பதுவோ
ஒருநாளும் வாராது
பேருக்கு முறைசொல்லிப்
பேச்சளவில் உறவாடும்
பிறப்புவழிச் சொந்தங்கள்
பேசாதீர் இனிமேலும்.
யாருக்கு வேண்டுமிந்த
ஏமாற்று உறவுகள்?
யார்யார் மனமெல்லாம்
அன்புமலர் பூக்கிறதோ,
பாருக்குள் அவருள்ளே
பாசத்தின் பந்தங்கள்
பாங்குடனே வருமன்றோ
தன்னுயிரைத் தருமன்றோ…!
• பந்தபாசம் என்பது
இரத்த பாசத்தோடு
கலந்தது;
வந்தபாசமெல்லாம்
வாய்வார்த்தையோடு சரி.
• அன்பு என்று
சொல்லிக்கொண்டு
அலையுது உன் மனசு;
அன்பு என்று
சொல்வதெல்லாம்
அந்தக்காலப் பழசு.
முன்ன ஒன்னு
பின்ன ஒன்னு
சொல்வதுதான் புதுசு;
முதுகிலதான்
மொய்க்கும் இந்த
ஈக்கள் பல தினுசு
• மனக்கதவைப்
பூட்டிவை;
லாப நட்டக்
கணக்குப் பார்;
சுருங்கிப் போ…
சுகமாய் இரு....
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
மிக அருமையான பதிவு..
பந்தபாசம் என்பது
இரத்த பாசத்தோடு
கலந்தது;
வந்தபாசமெல்லாம்
வாய்வார்த்தையோடு சரி.
Post a Comment